Tuesday, November 2, 2010

அயோத்தி தாசப் பண்டிதர் விருது






தமிழகத்தில் தலித் தலைவர்களால் வெகுவாக அறியப்பட்டவர்அய்யா வேணுகோபால் . தமிழக அஞ்சல் துறையின் தலைமை தபால் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற திரு .வேணுகோபால் அவர்கள் , பஹுஜன் சமாஜ் கட்சியின் ,மாவட்ட தலைவராக பணியாற்றி ,கன்ஷிராம் அவர்களின் அன்பை பெற்றவர் , தற்பொழது இந்திய குடியரசு கட்சியின் மாநில துணை தலைவராக உள்ளார் .தனது அய்ம்பது வருட சமுக பணிக்காக இந்திய குடியரசு கட்சியின் பாலா சாஹிப் பிரகாஷ் அம்பேத்கர் அவர்களால்மற்றும் டாக்டர் செ.கு .தமிழரசன் ஆகியோரால் அம்பேத்கர்" அருந்தொண்டர் விருதும்" ,தலித் சாகித்ய அகாடெமியின்" அம்பேத்கர் பெல்லோ ஷிப்" விருதையும் மற்றும் பல்வேறு விருதுகளை பெற்றிருக்கிறார் .விழுப்புரம் மாவட்டம் ,கள்ளகுறிச்சி ,கே .சி .எஸ் .திருமண மண்டபத்தில் செம்மொழி இலக்கிய பேரவையின் சார்பில் 30/10/10 அன்று அயோத்தி தாச பண்டிதர் விருது முன்னாள் மத்திய சட்டத்துறை இணை அமைச்சர் திரு .வேங்கடபதி அவர்களால் வழங்கி கௌரவிக்கப்பட்டார் .இந் நிகழ்ச்சியில்" நம் குடியரசு "பத்திரிகையின் ஆசிரியர் மனமோகன தாஸ் ,மாரியப்பன் ,சிறுபான்மை வாரிய உறுப்பினர் புத்த தம்மா மௌரியா , டாக்டர் மகுடமுடி,டாக்டர் உதயகுமார் ,மற்றும் பல தமிழ் அறிஞர்கள் ,அகில உலக தமிழ் கவிஞர் சங்க செயலாளர் ,கவிஞர் சீதா ,ஆசுகவி ஆராவமுதன் ,மு .வரதராசனார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .

No comments:

Post a Comment